Showing posts with label Stotras - Saraswathy. Show all posts
Showing posts with label Stotras - Saraswathy. Show all posts

Friday, October 11, 2013

Saraswathi Andhadhi - சரஸ்வதி அந்தாதி

Image Courtesy - Google Images

 சகல நன்மைகளும் தரும் சரஸ்வதி அந்தாதி
கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதியை நித்தமும் அல்லது சரஸ்வதி பூஜையன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும்.

காப்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.  நூல்.

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர்
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக்
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன்
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப்
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர்
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும்
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச்
சேயகம் ஆன மலரகம் ஆவதும்  தீவினையா
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல்
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள்
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர்  ஆலயமாத்
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில்
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்  இமையவர் தாம்
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான்
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக்
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர்
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம்
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26

பொருளால் இரண்டும் பெறலாகும்  என்ற பொருள் பொருளோ
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல்
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும்
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும்
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29

     பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் 
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்  
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

சரசுவதி அந்தாதி முற்றுப்பெற்றது






Saturday, July 16, 2011

பத்ம புராணத்தில் பிருஹஸ்பதியால் செய்யப்பட்ட ஸரஸ்வதி ஸ்தோத்திரம்

பத்ம புராணத்தில் பிருஹஸ்பதியால் செய்யப்பட்ட ஸரஸ்வதி ஸ்தோத்திரம்
வித்யாலாபத்தையும், வாக்சாமர்த்தியத்தையும் ஐஸ்வர்யத்தையும், ராஜ ஸம்மானத்தையும் கொடுக்கும்

ஸரஸ்வதீம் நவஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்திதாம்                  |
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரயாஸ்தபதாம்           ||

சேதனர்களின் ஹிருதயத்தில் இருப்பவளாயும், பிரம்மாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்பொழுதும் சந்திரனுக்கு ப்ரியமுள்ளவளாயும், பிரகாசிக்கும் ஸ்ரீ சரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

மதிதாம் வரதாம் ஸூத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்                     |
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்        ||

ஸூப்ரகாஸாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்                     |
ஸூக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸூபாங்காம் ஸோபனப்ரதாம்   ||

பத்மோபவிஷ்டாம் குண்டலீனீம் ஸூக்லவர்ணாம் மனோரமாம்       |
ஆதித்யமண்டலமே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்                      ||

நல்லறிவைக் கொடுப்பவளாயும், உயர்ந்தவைகளைக் கொடுப்பவளாயும், பரிசுத்தையாயும், கையில் வீணாவாத்யத்துடன் அபீஷ்டங்களை கொடுப்பவளாயும், ஐம், ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற மந்திரத்தில் ப்ரியமுள்ளவளாயும், குத்ஸித புத்தி உள்ளவர்களை நாசம் செய்பவளாயும், நல்ல ப்ரகாசத்துடன் கூடியவளாயும், யாதொரு பிடிப்பில்லாதவளாயும், அஞ்ஞானமாகிற இருட்டைப் போக்கிறவளாயும், வெண்மையாயும், மோக்ஷ புருஷார்த்தத்தை கொடுப்பவளாயும், மிக்க அழகியவளாயும், சோபமான அங்கங்களோடு கூடியவளாயும், மங்களத்தைக் கொடுப்பவளாயும், தாமரையில் இருப்பவளாயும், அழகிய கர்ணாபரணத்தோடு கூடியவளாயும், வெண்மை நிறமுள்ளவளாயும், மனதிற்கு ஸந்தோஷத்தை அளிப்பவளாயும், ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளாயும் ஸ்ரீ விஷ்ணுவுக்கு ப்ரியையாயும் உள்ள ஸரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கின்றேன்.  (2 - 4)

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா                       |
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸரதிந்து ஸமர்ரபாம்                             ||

இம்மாதிரி ஒரு மாத காலம் மகாத்மாவான ஸ்ரீ ப்ருஹஸ்பதி பகவானால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரனுக்கொப்பான காந்தியோடு கூடிய ஸ்ரீ வாக்தேவியானவள் தன்னை நிஜரூபத்துடன் காக்ஷி அளித்தாள்

ஸரஸ்வத்யுவாச
வ்ரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே

ப்ருஹஸ்பதி:
வரதா யதி மே தேவி ஸம்யக்ஞானம் ப்ரயச்ச மே

ஸரஸ்வதீ
இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம்
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக் வேதவிதோ நர:

ஸ்ரீ ஸரஸ்வதி கூறுவதாவது:
உன்னுடைய மனதில் இருக்கும் அபீஷ்டத்தை வேண்டிக்கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

ஸ்ரீ ப்ரஹஸ்பதி பிரார்த்திப்பதாவது
என்னுடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய ஹே தேவி ! எனக்கு நல்ல ஞானத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம் ! 
திரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யுஸ்த்விதம்
ஜபதே ஸதா தேஷாம் கண்டே ஸதா வாஸம்
கரிஷ்யாமி ந ஸம்ஸய:

ஸரஸ்வதியின் அனுக்கிரஹம்
அஞ்ஞானமாகிற இருளைப் போக்கக்கூடிய ஸ்வச்சமான ஞானத்தை உனக்குக் கொடுத்தேன். நான்கு வேதம் அறிந்தவன்.
இந்த ஸ்தோத்திரத்தால் என்னை நன்கு ஸ்துதி செய்தால் என் ஞானத்திற்கு ஒப்பான பரம உத்தம ஞானத்தை அடைகிறான். ப்ரதி தினம் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்கிறவர்களின் கண்ட தேசத்தில் நான் ஸம்சயமின்றி வாஸம் செய்கிறேன்.