Wednesday, March 13, 2013

Yamashtakam - யமாஷ்டகம்

Image Courtesy - Google Image
॥ यमाष्टकम्॥
तपसा धर्ममाराध्य पुष्करे भास्करः पुरा । धर्मं सूर्यः सुतं प्राप धर्मराजं नमाम्यहम् ॥१॥

समता सर्वभूतेषु यस्य सर्वस्य साक्षिणः। अतो यन्नाम शमनं इति तं प्रणमाम्यहम् ॥२॥

येनान्तश्च कृतो विश्वे सर्वेषां जीविनां परम् । कर्मानुरूपं कालेन तं कृतान्तं नमाम्यहम् ॥३॥

भिभर्ति दण्डं दण्डाय पापिनां शुद्धिहेतवे । नमामि तं दण्डधरं यश्शास्ता सर्वजीविनाम् ॥ ४॥

विश्वं च कलयत्येव यस्सर्वेषु च सन्ततम् । अतीव दुर्निवार्यं च तं कालं प्रणमाम्यहम् ॥ ५॥

तपस्वी ब्रह्मनिष्टो यः सम्यमी सन् जितेन्द्रियः। जीवानां कर्मफलदः तं यमं प्रणमाम्यहम् ॥६॥

स्वात्मारमश्च सर्वज्ञो मित्रं पुण्यकृतां भवेत् । पापिनां क्लेशदो नित्यं पुण्यमित्रं नमाम्यहम् ॥७॥

यज्जन्म ब्रह्मणोंशेन ज्वलन्तं ब्रह्मतेजसा । यो ध्यायति परं ब्रह्म तमीशं प्रणमाम्यहम् ॥८॥

यमाष्टकमिदं नित्यं प्रातरुत्ताय यः पटेत् । यमात् तस्य भयं नास्ति सर्वपापात् विमुच्यते ॥९॥

|| யமாஷ்டகம் ||
தபஸா த⁴ர்மமாராத்⁴ய புஷ்கரே பா⁴ஸ்கர​: புரா |
த⁴ர்மம்ʼ ஸூர்ய​: ஸுதம்ʼ ப்ராப த⁴ர்மராஜம்ʼ நமாம்யஹம் || 1 ||

ஸமதா ஸர்வபூ⁴தேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண​: |
அதோ யன்னாம ஸ²மனம்ʼ இதி தம்ʼ ப்ரணமாம்யஹம் || 2 ||

யேனாந்தஸ்²ச க்ருʼதோ விஸ்²வே ஸர்வேஷாம்ʼ ஜீவினாம்ʼ பரம் |
கர்மானுரூபம்ʼ காலேன தம்ʼ க்ருʼதாந்தம்ʼ நமாம்யஹம் || 3 ||

பி⁴ப⁴ர்தி த³ண்ட³ம்ʼ த³ண்டா³ய பாபினாம்ʼ ஸு²த்³தி⁴ஹேதவே |
நமாமி தம்ʼ த³ண்ட³த⁴ரம்ʼ யஸ்²ஸா²ஸ்தா ஸர்வஜீவினாம் || 4 ||

விஸ்²வம்ʼ ச கலயத்யேவ யஸ்ஸர்வேஷு ச ஸந்ததம் |
அதீவ து³ர்நிவார்யம்ʼ ச தம்ʼ காலம்ʼ ப்ரணமாம்யஹம் || 5 ||

தபஸ்வீ ப்³ரஹ்மநிஷ்டோ ய​: ஸம்யமீ ஸன் ஜிதேந்த்³ரிய​: |
ஜீவானாம்ʼ கர்மப²லத³​: தம்ʼ யமம்ʼ ப்ரணமாம்யஹம் || 6 ||

ஸ்வாத்மாரமஸ்²ச ஸர்வஜ்ஞோ மித்ரம்ʼ புண்யக்ருʼதாம்ʼ ப⁴வேத் |
பாபினாம்ʼ க்லேஸ²தோ³ நித்யம்ʼ புண்யமித்ரம்ʼ நமாம்யஹம் || 7 ||

யஜ்ஜன்ம ப்³ரஹ்மணோம்ʼஸே²ன ஜ்வலந்தம்ʼ ப்³ரஹ்மதேஜஸா |
யோ த்⁴யாயதி பரம்ʼ ப்³ரஹ்ம தமீஸ²ம்ʼ ப்ரணமாம்யஹம் || 8 ||

யமாஷ்டகமித³ம்ʼ நித்யம்ʼ ப்ராதருத்தாய ய​: படேத் |
யமாத் தஸ்ய ப⁴யம்ʼ நாஸ்தி ஸர்வபாபாத் விமுச்யதே || 9 ||

சூரியதேவன், தருமத்தைக் குறித்துத் தவம் செய்து, தங்களைப் பெற்றதால், தர்மராஜர் எனப் பெயர் பெற்ற தங்களை நமஸ்கரிக்கிறேன்.

எல்லா உயிரினங்களையும் சமமாகப் பார்க்கும் தாங்கள், இவ்வுலகமனைத்திலும் நடைபெறும் செயல்களுக்கு சர்வ சாக்ஷியாக இருக்கிறீர்கள். அதனால் சமன் எனப் பெயர் பெற்ற உம்மை வணங்குகிறேன்.

காலத்திற்கேற்ப, அனைத்து உயிரினங்களையும் நாசம் செய்யும் கர்மரூபியாக இருப்பதால், கிருதாந்தகன் எனப் பெயர் பெற்ற தங்களை நமஸ்கரிக்கிறேன்.

பாவிகளைச் சுத்தம் செய்வதற்காக, தண்டாயுதம் தரித்திருப்பதால், தண்டதரன் எனப் பெயர் கொண்ட உம்மை வணங்குகிறேன்.

இவ்வுலகமனைத்திலும், சர்வக்ஞராக இருப்பதால், காலன் எனப் பெயர் பெற்ற உம்மை வணங்குகிறேன்.

தவத்தில் சிறந்தவராகவும், இந்திரியங்களை ஜெயித்தவராயும், ஜீவர்களுக்கு கர்மபலனைக் கொடுப்பவராகவும் இருப்பதால், யமன் எனப் பெயர் பெற்ற தங்களை வணங்குகிறேன்.

தம் ஆத்மாவையே தோட்டமாக உடையவராகவும், பாவம் செய்கிறவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பவராகவும், புண்ணிய ஆத்மாக்களின் நண்பராகவும் இருக்கிறபடியால், புண்ணியமித்திரன் எனப் பெயர் பெற்ற தங்களை வணங்குகிறேன்.

பிரம்மனின் அம்சமாகவும், பிரம்ம தேஜஸால் ஜொலிப்பவராகவும் பரப்பிரம்மத்தைத் தியானிக்கும் ஈசராகவும் இருக்கும் தங்களை நமஸ்கரிக்கின்றேன்.

 பரம பவித்திரமான இந்த யமாஷ்டகத்தை யார் காலை நேரத்தில் பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, அவர்களுக்கு யமபயம் நீங்கும். எல்லா பாவங்களும் விலகிவிடும். எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவர்களும் இதைப் பாராயணம் செய்தால், யமதண்டனைகளிலிருந்து விடுபடுவார்கள்.

No comments:

Post a Comment