Monday, February 18, 2013

Sri Vinayakar Stuti - ஸ்ரீ விநாயகர் துதி



வாகீசாத்யா: ஸுமநஸ: ஸர்வார்த்தாநாம் உபக்ரமே |

யம் நத்வா க்ருத க்ருத்யாஸ்யு: தம் நமாமி கஜானனம் ||



பிரம்மா முதலிய தேவர்களும் தாங்கள் எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எவரை வணங்கி, அந்தக் காரியத்தைத் தடையின்றி முடிக்கிறார்களோ, அந்த யானைமுகத்தோனை நானும் வணங்குகிறேன்.   

- ஸ்ரீ விக்னேஸ்வர ஸ்துதி மஞ்சரி



ஸ்ரீ விநாயகர் துதி



குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்

குவலயம் போற்றும் கணநாதா !

வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்

வடிவேலவனின் சோதரனே !

அருள்வாய் !  உனையே அனுதினம் பணிவேன்

அன்னை பராசக்தி அருள்மகனே !

திருமால் மருகா ! திருவடி சரணம்

தீன ரக்ஷகனே கணநாதா !



ஆனையின் அன்பன் அழகு முருகனின்

அண்ணனாய் உலகில் அவதரித்தாய் !

ஆனை முகத்தொடு ஐங்கரங் கொண்டதோர்

அற்புத வடிவே ! கணநாதா !

யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்

என் துயர் களைவாய் !  கணநாதா !

அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய் !

அரவணைத்தெனையும் ஆண்டருள்வாய் !



பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

பார்வதி மைந்தா !  கணநாதா

வல்லபை நாதா ! விக்ன விநாயகா

வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே !

வல்வினை எல்லாம் வலிமை இழந்தே

வாடிடச் செய்வாய் ! கணநாதா !

தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்

துன்பமெலாம் நீ துடைத்திடுவாய் !

அல்லொடு பகலும் அனவரதமும் உன்

அடியினைத் தொழுவேன் கணநாதா !



வானோடு நீரும் வளியும் தீயும்

வையகம் யாவும் மகிழ்வுறச் செய்வாய் !

மங்கலப் பொருளே கணநாதா !

தேனோடு பாலும் தெங்கொடு பழமும்

தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன் !

ஊனோடு உயிரும் உணர்வும் புரப்பாய் !

உன்னடி தொழுதேன் கணநாதா !



ஒமெனும் வடிவே உன் வடிவாமென

உலகிற்கெலாம் நீ உணர்த்திடுவாய் !

ஆம் எனச் சொல்வாய் ! அன்னை குமாரா !

ஆதரித்தருள்வாய் !  கணநாதா !

ஒமெனும் பொருளே உமையவள் பாலா !

ஒரு பரம்பொருளே !  கணநாதா !



சங்கரன் மகனே !  சஞ்சலம் தீர்ப்பாய்

சக்தி குமாரா !  கணநாதா

ஐங்கரனே !  உன் அடியினை தொழுதேன்

அடைக்கலம் நீயே கணநாதா !

சங்கரித்திடுவாய் சங்கடமெல்லாம்

சம்புகுமாரா !  கணநாதா !

சங்கரி மைந்தா !  சந்ததம் பணிவேன்

சரணம் !  சரணம் !  கணநாதா !


Source Courtesy - Sri Ramakrishna Vijayam Magazine

2 comments:

பார்வதி இராமச்சந்திரன். said...

ஸ்ரீ கணேச பாஹிமாம்!!!, ஜெய கணேச பாஹிமாம்!!. அருமையான பதிவு. நன்றிகள் பல.

kshetrayatraa said...

சகோதரியின் வருகைக்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி

Post a Comment