Saturday, February 23, 2013

Sri Sitala Devi Aarthi - ஸீ²தலா மாதா கீ ஆரத்தி

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Kalighat_Shitala.jpg/250px-Kalighat_Shitala.jpg
शीतला माता की आरती
ॐ जय जय जय शीतला माई ।

गुरु द्रोण की पत्‍नी हो तुम माई । इसीलिये तुम जग मात कहाई ।

ॐ जय जय...

शीतला, चेचक को तू दूर भगावे । मसान से तू पिण्ड छुड़ावे ॥

ॐ जय जय.....

राजा रंक सभी तो यहां आवें । खुलकर यहां पर धन चढ़ावें ॥

ॐ जय जय.....

यहां है न कोई बड़ा न छोटा । बाल मुण्डन संस्कार यहीं पर है होता ॥

ॐ जय जय.....

जो भी द्वारे तेरे आया । मन इच्छा फ़ल उसने पाया ॥

ॐ जय जय....

जिसने भी मत्‍था टेका यहां । कल्‍याण उसका होता देखा यहां ॥

ॐ जय जय.....

सिंघा भक्त ने तेरी पूजा कीन्हीं । दर्शन तू वाको रात को दीन्ही ॥

ॐ जय जय.....

शरण तेरी अब मैं आया मईया । पार लगा दो अब मेरी नईया ॥

ॐ जय जय शीतला माई ।


ஸீ²தலா மாதா கீ ஆரத்தி
(ஸ்ரீ சீதலா தேவியின் ஆரத்தி பாடல்)


ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி |

கு³ரு த்³ரோண கீ பத்னீ ஹோ தும் மாயி |

இஸீலியே தும் ஜக்³  மாத கஹாயி |

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம்.... நீயே குரு துரோணரின் பத்னி. ஆதலால் உன்னை இந்த உலகத்திற்கே அன்னை என்று அழைக்கிறார்கள்.)

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி...

ஸீ²தலா, சேசக கோ தூ தூ³ர் பகா³வே |

மஸான் ஸே தூ பிண்ட³  சூ²டா³வே ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம்...... தாயே, நீ (உன் கருணையால்) அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்களை தூர விரட்டி விடுகிறாய்.
மயானத்தில் இருந்து பிண்டத்தை விடுவிக்கிறாய் (பிறந்து, இறந்து அழியும் இவ்வுடலுக்கும் பிண்டம் என்ற பெயர் பொருந்தும். தாய் தன் பெருங்கருணையால், ஜனன மரணப் பிணியிலிருந்தும் மக்களை விடுவிக்கிறாள் என்பது உட்பொருள்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி....

ராஜா ரங்க் ஸபீ தோ யஹாங்  ஆவே(ம்) |

கு²லகர் யஹாங் பர் தன் ச‌டாவே(ம்) ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம். ....தாயே, ராஜாவிலிருந்து ரங்கன் வரை (அரசனிலிருந்து சாதாரணக் குடிமகன் வரை) அனைத்து மக்களும் உன் சந்நிதியில் வந்து,  சந்தோஷம் நிறைந்த மனத்துடன், அளவற்ற செல்வத்தை உனக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி.....

யஹாங் ஹை ந கோயி ப³டா³  ந சோ²டா |

பா³ல் முண்ட³ன் ஸம்ஸ்கார் யஹீங் பர் ஹை ஹோதா ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம். .....தாயே, உன் சந்நிதியில் அனைவரும் சமம். பெரியவர், சிறியவ‌ர் என்னும் பேதமே கிடையாது.  உனது பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதால் உனக்கு முடிகாணிக்கை செலுத்துகிறார்கள்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி.....

ஜோ பீ  த்³வாரே தேரே ஆயா |

மன் இச்சா² ஃபல் உஸ்னே பாயா ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம்...... அம்மா, உன் திருக்கோவிலின் வாயிலை அடைந்தவர், அவரவர் விரும்பிய வரங்களைப் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வர்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி....

ஜிஸ்னே பீ  மத்தா²  டேகா யஹாங்  |

கல்யாண் உஸ்கா ஹோதா தே³கா² யஹாங் ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம்......தாயே, உனக்கு (குளிர்ச்சி பொருந்திய) தயிரும் நீரும் சமர்ப்பித்தவர், உன்  திருவருளால்  அளவில்லாத நன்மைகள்  பெற்று, வளமுடன் வாழ்வர்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி.....

ஸிங்கா பக்த நே தேரீ பூஜா கீன்ஹீ(ம்) |

த³ர்ஸ²ன் தூ வாகோ ராத் கோ தீ³ன்ஹீ ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம்.....அம்மா, உன்னை பூஜிக்கும் பக்தர்களின் (ஆத்மார்த்தமான) பக்தியை ஏற்று, உன் திவ்யரூப‌ தரிசனத்தை, இரவில், ஆழ்மன நிலையில் காணும் பேற்றினை அவர்களுக்கு அளித்தருளுகிறாய்).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி.....

ஸ²ரண் தேரீ அப்³  மை(ம்) ஆயா மைய்யா |

பார் லகா³ தோ³ அப்³ மேரீ நைய்யா ||

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம். .....உன் திருவடி நிழலே சரணம் என்று அடைந்தேன் அம்மா. என்னை ஆட்கொண்டு நல்வழி காட்டி அருள்வாய் அம்மா).

ஓம் ஜெய் ஜெய் ஜெய் ஸீ²தலா மாயி |

(ஸீதலா தேவியின் திருநாமத்தை நாங்கள் போற்றுகிறோம். ....)

No comments:

Post a Comment