Tuesday, March 9, 2010

படித்ததில் பிடித்தது....உறவுகள் மேம்பட

படித்ததில் பிடித்தது....உறவுகள் மேம்பட
வெளியீடு ஞாபகமில்லை ஆனால் வார்த்தைகள் மனதில் பதிந்து இதுவரை வழிகாட்டியாய் உள்ளது...

1. நானே பெரியவன். நானே சிறந்தவன் என்னும் அகந்தையை விடுங்கள்
2. அர்த்தமில்லாத, தேவையில்லாத, பின் விளைவு அறியாத பேச்சுகளை தவிருங்கள்
3. எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்
4. விட்டுக் கொடுங்கள்
5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்
6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்
8. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே  சொல்வதையும் விடுங்கள்.
9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்
10. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும். இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
11. பிரச்னைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
12. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
13. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாமலும், கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாமலும் இருப்பதும் நல்லது.
14. புன்முறுவலும், அன்புச் சொற்களும் உறவை மேம்படுத்தும் சாதனங்கள். அடிக்கடி பயன்படுத்துங்கள்
15. அளவுக்கதிகமாக, தேவைக்கதிகமாக ஆசைப்படுவதை விட வேண்டும்.

No comments:

Post a Comment