Tuesday, May 21, 2013

Sri Lakshmi Namanashtakam - ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகம்


॥ ॐ श्रीलक्ष्मीदेव्यै नमः ॥
॥ श्रीलक्ष्मी नमनाष्टक ॥
नमस्कार महामाये, जगन्माते परात्परे ॥
शंख चक्र गदा हस्ते, लक्ष्मीमाते नमो स्तुते ॥१॥
आदि नहीं अंत नहीं, आद्यशक्‍ति सचमुच तू ॥
विश्वाधारे विष्णूकान्ते, लक्ष्मीमाते नमोस्तुते ॥२॥
सर्व व्यापी सर्वसाक्षी, शुध्दसत्वस्वरूपिणी ॥
सर्वज्ञे सिंधु संभूते, लक्ष्मीमाते नमोस्तुते ॥३॥
कमले कमलनेत्रे कोमले कमलासने ॥
मंगले मुदिते मुग्धे, लक्ष्मीमाते नमोस्तुते ॥४॥
शुभ्रवस्त्रधारिणी हे, गरुडध्वजभामिनी ॥
दिव्यालंकार भूषिते, लक्ष्मीमाते नमोस्तुते ॥५॥
सर्व दुःख हरे देवी, भुजंग शयनांगने ॥
भगवती भाग्यदात्री, लक्ष्मीमाते नमोस्तुते ॥६॥
सिद्धिबुद्धि भुक्तिमुक्ति संतती सुखसंपदा ॥
आयुरारोग्यहि देनेवाली लक्ष्मीमाते नमोस्तुते ॥७॥
नमोनमः महालक्ष्मी धनवैभवदायके ॥
दैन्य हमारे दूर करो, प्रार्थी मिलिंद माधव ॥८॥
पठन - श्रवण भावे नित्य करे नमनाष्टका ॥ 
मनोकामना प्राप्त हो, सत्य श्रध्दायुक्त भावुका ॥९॥


||  ஓம்ʼ ஸ்ரீலக்ஷ்மீதே³வ்யை நம: ||
ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகம்
நமஸ்கார மஹாமாயே, ஜக³ந்மாதே பராத்பரே ||
²ங்க² சக்ர ³தா³ ஹஸ்தே, லக்ஷ்மீமாதே நமோ ஸ்துதே || 1 ||

உயர்ந்தது அனைத்திலும் உயர்ந்தவளாம் உலகுக்கெல்லாம் தாய் அவளாம்
அன்புக்கரங்களில் சக்கரம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.
 
ஆதி³ நஹீʼ அந்த் நஹீʼ, ஆத்³யஸ²க்தி ஸச்முச் தூ ||
விஸ்²வாதாரே விஷ்ணூகாந்தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 2 ||

முதலும் இல்லா முடிவும் இல்லா முழுமுதற் கடவுள் நிச்சயம் நீ !!
மூவுலகுக்கும் ஆதாரமாய் நிற்கும் மூலப் பொருளும் பத்மினி நீ !!
அலைகடல் துயிலும் திருமால் விரும்பும் அற்புதப் பொக்கிஷம் தேவி நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஸர்வ வ்யாபீ ஸர்வஸாக்ஷீ, ஸு²த்³ ஸத்வ ஸ்வரூபிணீ ||
ஸர்வஜ்ஞே ஸிந்து ஸம்பூதே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 3 ||

எங்கும் நிறைவாள் எதற்கும் சாட்சி என்னுயிர் நீயே ஸ்ரீலக்ஷ்மி!!
தூய நன் மனதில் குடி கொண்டருள்வாள் மன்னுயிர் மாதா ஸ்ரீலக்ஷ்மி!!
சாந்தரூபிணி சகலமும் அறிவாள் பாற்கடல் தந்த ஸ்ரீலக்ஷ்மி!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை  லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்

கமலே கமலநேத்ரே கோமலே கமலாஸநே ||
மங்க³லே முதி³தே முக்³தே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 4 ||

விழிகள் தாமரை, அமர்வதும் தாமரை, நிறமும் தாமரை, தாமரை நீ!!
மாதவன் கருணை உயிர்களுக்களித்திடும் மங்கல உருவாம் அம்பிகை நீ!!
முக்தியளித்திடும் மூலமும் நீயே மூவுலகும் தொழும் அற்புதம் நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஸு²ப்ர வஸ்த்ர தாரிணீ ஹே, ³ருட³த்வஜ பாமிநீ ||
தி³வ்யாலங்கார பூஷிதே, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 5 ||

தூயநல் ஆடை அணிந்தே அருள்வாய், தூயவள் நீயே திருமகளே!!
திறமிகு கருடனைக் கொடியில் கொண்டாய் திருவருள் நீயே திருமகளே!!
அலங்கார ரூபிணி, அன்புக் கடல் நீ, கருணை பொழிவாய் திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

ஸர்வ து³:² ஹரே தே³வீ, புஜங்க³ ²யநாங்க³நே ||
³வதீ பாக்³யதா³த்ரீ, லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 6 ||

துக்கக் கடலில் மூழ்கிடுவோரின் துயரம் தீர்ப்பாய் பொன்மகளே!!
அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!!
பகவதி நீயே பாக்கியம் தந்திடும் பரம்பொருள் நீயே திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்

ஸித்³திபு³த்³தி புக்திமுக்தி ஸந்ததீ ஸுக²ஸம்பதா³ ||
ஆயுராரோக்³யஹி தே³நேவாலீ லக்ஷ்மீமாதே நமோஸ்துதே || 7 ||

சித்தியும் புத்தியும் தந்திடுவாய் நீ சிறப்புகள் தருவாய் அருளமுதே!!
இகபர சுகமும் இனிதான ஆயுளும் இணையாய் அருள்வாய் இன்னமுதே!!
மழலை பாக்கியமும், மனம்நிறை வாழ்வும் மகிழ்ந்தே தருவாய் தெள்ளமுதே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

நமோ நம: மஹாலக்ஷ்மீ நவைபவதா³யகே ||
தை³ந்ய ஹமாரே தூ³ கரோ, ப்ரார்தீ² மிலிந்த³ மாத || 8 ||

பொருளை அருளும் பொற்செல்வி, புகழும் அருள்வாய் தாயே நீ!!
ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாய் என் துணை வருவாய் தாயே நீ!!
வைபவம் அருளும் வைபவ லக்ஷ்மி வளங்கள் தருவாய் தாயே நீ !!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

பட² - ஸ்²ரவண பாவே நித்ய கரே நமநாஷ்டகா ||
மநோகாமநா ப்ராப்த ஹோ, ஸத்ய ஸ்²ரத்தா³யுக்த பாவுகா || 9 ||

நல்லன அருளும் நமனாஷ்டகம் இதை நாளும் துதித்து நலம் பெறுவோம்!!
பக்தியாய் படித்தாலும் படிப்பதைக் கேட்டாலும் பவவினை தீரும் சுகமடைவோம்!!
நிதமும் துதித்து நமஸ்கரித் தெழுந்தால் நிலமெல்லாம் போற்றும் நிச்சயமே!!
நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் திருமகள் அருள்வாள் சத்தியமே!!


ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகத்தின் தமிழ் விளக்கத்தை கவிதையாக வடிவமைத்த பெருமை  எனது சகோதரியும், சகபதிவாளரும் ஆன திருமதி. பார்வதி ராமச்சந்திரன் அவர்களையே சாரும். தமிழ் விளக்கத்தை கவிதை வடிவில் அமைத்துத் தந்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சகோதரியின் வலைப்பூவை காண இங்கு சொடுக்கவும்.

விளக்கமே ஒரு ஸ்தோத்ரம் போல் அமைந்திருப்பதால் அதை தனியாகவும் தேவி லக்ஷ்மீ துதியாக எடுத்து பாராயணம் செய்யலாம்.

5 comments:

Unknown said...

ஆஹா! அற்புதமான கவிதைத் தேனிது!
"அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!"

சகோதரி அருமை... மனதினில் லஷ்மியை வாக்கினில் சரஸ்வதியை சிந்தனையில் பரமேஸ்வரியை என்று முப்பெரும் தேவியை இப்பெரும் பாடல்களை பக்தியால் கருக்கொண்டு பிரசவித்து அம்பிகையை குளிரச் செய்துள்ளீர்கள்!

அருமை! அருமை!! அருமை!!!

சித்தியும் புத்தியும் தந்தருள்வாய் - சீர்மேவும்
சிறப்புகள் யாவும் வழங்கிடுவாய்
பக்தியில் நானுனைத் தொழுதிடுவேன் - பரமபதமதை
பெற்றிடும் பாக்கியம் எனக்கருள்வாயே
எத்தனைத் துயரங்கள் யான்இங்கே பெற்றிடினும் -நின்
பொற்பாதங்களை சிரமேல்கொள்வேன் அறிவாயோ!
அத்தனையும் மறந்து போகவே அம்மையே -இன்னும்
எத்தனை காலமா குமம்மா!

நன்றிகள் உங்கள் இருவருக்கும்.

kshetrayatraa said...

தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி. சகோதரியிடம் மூப்பெரும் தேவியரின் அருள் நிறைய உள்ளது.
தங்களைப் போன்ற சான்றோர்களின் பாராட்டு அவர் இன்னும் இது போல் நிறைய எழுத ஊக்கமளிக்கும்.
தங்களின் மனமார்ந்த உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பார்வதி இராமச்சந்திரன். said...

கவிதைகள் எழுத என்னைத் தூண்டி ஊக்குவித்த ஆலாசியம் அண்ணாவுக்கும், 'நமனாஷ்டகத்தைத் கவிதை வடிவில் தமிழ்ப்படுத்த உங்களால் முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்தியதோடு, அதைத் தன் வலைப்பூவில் வெளியிடவும் செய்த சகோதரர் திரு.க்ஷேத்ரயாத்ரா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இது அம்பிகையின் பேரருளாலும் உங்கள் இருவரின் ஊக்கத்தாலுமே சாத்தியமாகியிருக்கிறது. மீண்டும், இரண்டு சகோதரர்களுக்கும் என் இனிதான நன்றிகள்.

Kavinaya said...

தமிழாக்கம் மிகவும் அருமை! நிறைய வார்த்தைப் பிரயோகங்கள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன. 'அமுதப் புனல்' என்று அன்னையைச் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது. பார்வதிக்கு அன்னையின் அருள் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி.

kshetrayatraa said...

சகோதரியின் வருகைக்கும், உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

//பார்வதிக்கு அன்னையின் அருள் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை //

தங்களின் வார்த்தைகள் சகோதரி பார்வதிக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மிக்க நன்றி.

Post a Comment