Thursday, October 13, 2011

12 ராசிகளும் விநாயகர் வழிபாடும் - Final Part

இதன் முதல் பகுதி லிங்க் -  12 ராசிகளும் விநாயகர் வழிபாடும் - Part I

பொதுவானது : எல்லா ராசிக்காரர்களும் முதலில் விநாயக சதுர்த்தி அன்று ராசிக்குரிய விநாயகர் பூஜை செய்து பின்னர் ராசிக்குரிய விநாயகர் மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம். அவசியம் என்றால் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் பூஜை செய்த பின்னர் தொடங்கலாம். 

மேஷம்

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வக்ரதுண்ட விநாயகரை வழிபடுவதால் தைர்யம், பராக்ரமம் ஆகியவற்றோடு எதிரிகளிடமிருந்து காத்தும் அருளுவார்.

ரிஷபம் 

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சக்தி விநாயகரை வழிபடுவதால் பாக்யம் கிட்டுவதோடு அனைத்து வித முன்னேற்றங்களும் அடைவர்.

மிதுனம்  

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் லக்ஷ்மி விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெறுவதோடு இல்லாமல் நல்ல உடல் நலம் மற்றும் தேக ஆரோக்கியமும் கிட்டும்.

கடகம் 

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வக்ரதுண்ட விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் வரும் சங்கடங்கள், துன்பங்களிலிருந்து விடுபடுதலும், செயற்கரிய செயலை செய்யும் ஆற்றலும் கிட்டும்.

சிம்மம் 

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் லக்ஷ்மி விநாயகரை வழிபடுவதால் பொருளாதார விருத்தி, குடும்ப மகிழ்ச்சி, விருப்பத்திற்கு ஏற்ற பணியிடம், பொருளாதார மேம்பாடு ஆகியவை கிட்டும்.

கன்னி

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் லக்ஷ்மி விநாயகரை வழிபடுவதால் நல்ல உடல் ஆரோக்கியம்,  மனதுக்கு உகந்த பணியிடம்,  உயர்வான தன-சம்பத்து ஆகியவை கிட்டும்.

துலா

இந்த ராசிகாரர்கள் சக்தி விநாயகரை வழிபடுவதால் பாக்ய விருத்தி, துன்பம் தரும் கவலைகளிலிருந்து விடுதலை, மன நிம்மதி ஆகியவை கிட்டும்.

விருச்சிகம்

இந்த ராசிகாரர்கள் வெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால், பொருளாதாரம் ஸ்திரப்படுதல்,  இன்னல்களிலிருந்து விடுதலை ஆகியவை கிட்டும்.

தனுசு

இந்த ராசிகாரர்கள் ஹரித்ரா விநாயகரை வழிபடுவதால் நல்ல வேலை அமைதல், நல்ல குடும்பத்திலிருந்து கல்யாண சம்பந்தம் அமைதல் ஆகியவை கிட்டும்.

மகரம்

இந்த ராசிகாரர்கள் லக்ஷ்மி விநாயகரை வழிபடுவதால் பாக்ய விருத்தி, சத்ரு ஜெயம் ஆகியவை கிட்டும்.

கும்பம் 

இந்த ராசிகாரர்கள் சக்தி விநாயகரை வழிபடுவதால், அசாத்திய தன்னம்பிக்கை, நல்ல கல்வி, வேலை, இனிமையான வாழ்க்கை துணை ஆகியவை கிட்டும்.

மீனம்

இந்த ராசிகாரர்கள் ஹரித்ரா விநாயகரை வழிபடுவதால் குடும்பத்தார், உற்றார், உறவினர் உதவி, ஸ்திர சொத்து சேருதல்,  விருப்பத்திற்கேற்ப மனைவி அமைதல் ஆகியவை கிட்டும்.

No comments:

Post a Comment