Wednesday, June 20, 2012

Aapathutharana Sri Rama Stotra - ஆபதுத்தாரண ஸ்ரீராம ஸ்தோத்திரம்

ஆபதுத்தாரண ஸ்ரீராம ஸ்தோத்திரம்
ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்தானாமார்தி ஹந்தாரம் பீதானாம் பீதிநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்

ஸந்நத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருதஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாய ஆபந்நிவாரிணே

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

அக்ரத: ப்ருஷ்டத: சைவ
பார்ஸ்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ணத ந்வாநௌ
ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ

|| இதி ஆபதுத்தாரண ஸ்ரீ ராம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ஸ்ரீ ராம ஸ்தோத்ரத்தின் பொருள்

ஸ்ரீ ராமன் கஷ்டங்களை விலக்குகின்றவர். சகல சம்பத்துக்களையும் கொடுப்பவர். அகில லோகங்களிலும் அழகன்; அப்படிப்பட்ட ராமரை அடிக்கடி வணங்குகிறேன்.

பீடையை அடைந்தவர்களின் பீடைகளையும், பயந்தவர்களின் பயத்தையும் நாசம் செய்பவர். சத்ருக்களை நாசம் செய்ய யமதண்டமாயிருப்பவர். அப்படிப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரனை வணங்குகிறேன்;

யௌவனப் பருவத்திலுள்ளவர், லக்ஷ்மணனுடன் கூடியவர், கச்சையைத் தரித்தவர், கவசம் அணிந்தவர், ஸ்ரீ ராமர் கத்தி, வில், பாணம் இவற்றைத் தரித்தவர். இம்மாதிரிக் கோலத்தில் என் முன்னால் சென்று கொண்டே போய் எப்பொழுதும் என்னை என் மார்க்கத்தில் (வாழ்க்கையிலும் கூட) காப்பாற்ற வேண்டும்.

வில்லைக் கையில் தரித்தவர். நாண் கயிற்றால் தொடுக்கப்பட்ட பாணத்தை உடையவர். எல்லா அசுரர்களையும் வதம் செய்தவர்; கஷ்டங்களை விலக்குபவர். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.

வஸிஷ்டர் முதலான ப்ரம்ஹத்தை அறிந்தவர்களால் ஸ்ரீ ராமர் என்றும், தசரதரால் ராமபத்திரர் என்றும், கௌஸல்யையினால் ராமசந்திரன் என்றும், ரிஷிகளால் ரகுநாதன் என்றும், சீதையினால் நாதன் என்றும், சீதையின் தோழிகளால் சீதாபதி என்றும் அழைக்கப்படுகிற உங்களுக்கு என் நமஸ்காரம்.

காது வரை இழுக்கப்பட்ட நாண் கயிற்றையுடைய வில்லைத் தரித்தவர்களாயிருந்து கொண்டு அதிகபலசாலிகளான ராமலக்ஷ்மணர்கள் என்னை ரக்ஷிக்க வேண்டும்.

ஸ்ரீ ராம ஸ்தோத்திரத்தின் அர்த்தம் முற்றிற்று.

No comments:

Post a Comment