Sunday, April 18, 2010

விநாயகர் கவசம்


விநாயகர் கவசம்
வளர் சிகையை பராபரமாய் வயங்கு  விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா  அதிக சவுந்தர தேக மதோர்கடற் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை யென்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர்  காக்க 
தடவிழிகள் பாலச்சந்திரனார் காக்க கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க

தாலம் கணக் கீரிடர் காக்க நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க அவிர்நகை துன்முகர் காக்க
அள் எழில் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாது இளங்கொடி போல் வளர்மணி நாசியைச் சித்திதார்த்தர் காக்க

காமரூ பூ முகம் தன்னை குணேசர் நனிகாக்க களம் கணேசர் காக்க
வாமம் உறும் இரு தோளும் வயங்கு கந்தபூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமம் உறும் மணிமுலை விக்கின வினாயகன் காக்க
இதயம் தன்னைத் தோம் அகலும் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க

பக்கமிரண்டையுந் தராதரர் காக்க பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கி லிங்கம் வியாள பூடணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க சகனத்தை யல்லல்
உக்க கணபன் காக்க ஊருவை மங்கள மூர்த்தி யுவந்து காக்க

தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க இருபதம் மேகதந்தர் காக்க
வாழ்கரங்கப் பிரப்பிரசாதனர் காக்க முன்கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க விரல் பதும அத்தர் காக்க
கேழ்கிளரு நகங்கள் விநாயகர் காக்க கிழக்கினில் புத்தீசர் காக்க

அக்கினியில் சித்தீசர் காக்க உமாபுத்திரர் தென் ஆசை காக்க
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க விக்கினவர்த்தனர் மேற்கென்னுந்
திக்கு அதனில் காக்க வாயுவில் கசகன்னன் காக்க திகழு தீசி
தக்க நிதிபன் காக்க வடகிழக்கில் ஈச நந்தனரே காக்க

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க இரவினுஞ் சந்தியிரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க இராக்கதர் பூதம் உறுவேதாளம்
மோகினி பேய் இவையாதி உயிர்த்திறத்தால் வரும் துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்கு புபாசாங்குசர் தாம் விரைந்து காக்க

மதி ஞானம் தவம் தானம் மானம் ஒளி புகழ் குலம் வண் சரீர முற்றும்
பதிவான தனம் தானியம் கிரகம் மனைவி மைந்தர் பயில் நட்பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க

வென்றசீ விதங் கபிலர் காக்க கரியாதி யெலாம் விகடர் காக்க
என்று இவ்வாறு இதுதனை முக்காலமும் ஓதிடின் நும்பால் இடையூறு ஒன்றும்
ஒன்றுறா முனிவர்காள் ! அறிமின்கள்  யாரொருவர் ஒதினாலும்
மன்றவாங்கு அவர் தேகம் பிணியறவச் சிரதேகம் ஆகி மன்னும்.

// விநாயகர் கவசம் முற்றிற்று //

No comments:

Post a Comment