Saturday, January 30, 2010

பச்சைத் திருப்பதிகம்


சனிக்கிரகத்தினால் வரும் எல்லாவித தோஷமும் போக்கி நலம் தரும் திருநள்ளாற்றுப் பதிகம்

பச்சைத் திருப்பதிகம்

போகம்‍ ஆர்த்த பூண்-முலையாள் தன்னோடும் பொன்‍ன‌கலம்
பாகம்-ஆர்த்த பைங்கண்‍ வெள் ளேற்ற‌ண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்-மேல்
நாகம்-ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே                  (1)

தோடு-உடைய காது-உடையன் தோல்-உடையன் தொலையாப்
பீடு-உடைய போர்-விடையன் பெண்ணும்-ஓர் பால்-உடையன்
ஏடு-உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு-உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே                  (2)

ஆன்-முறையால் ஆற்ற-வெண்-நீறு ஆடி அணியிழை-ஓர்
பான்-முறையால் வைத்த-பாதம் பத்தர் பணிந்து‍ ஏத்த
மான்-மறியும் வெண்-மழுவும் சூலமும் பற்றிய-கை
நான்-மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே             (3)

புல்க-வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து-அயலே
மல்க-வல்ல கொன்றை-மாலை மதியோடு உடன்-சூடி
பல்க-வல்ல தொண்டர்-தம்-பொன் பாத நிழல்-சேர
நல்க-வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே                      (4)

ஏறு-தாங்கி ஊர்தி-பேணி ஏர்-கொள் இளமதியம்
ஆறு-தாங்கும் சென்னிமேல்-ஓர் ஆடு-அரவம்-சூடி
நீறு-தாங்கி நூல்-கிடந்த மார்பில் நிரை-கொன்றை
நாறு-தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே                 (5)

திங்கள்-உச்சி மேல்-விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள்-உச்சி எம்-இறைவன் என்று-அடியே -இறைஞ்ச
தங்கள்-உச்சியால்-வணங்கும் தன்-அடியார்கட்கு எல்லாம்
நங்கள்-உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே                  (6)

வெஞ்சுடர்த்-தீ அங்கை-ஏந்தி விண்‍கொண் முழவு-அதிர
அஞ்சிடத்தோர் ஆடல்-பாடல் பேணுவது அன்றியும்-போய்
செஞ்சடைக்கு-ஓர் திங்கள்-சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு-அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே              (7)


சிட்டம்‍ஆர்ந்த‌ மும்மதிலுஞ் சிலைவரைத் தீ-அம்பினால்
சுட்டு-மாட்டிச் சுண்ண-வெண்-நீறு ஆடுவது அன்றியும்-போய்ப்
பட்டம்-ஆர்த்த சென்னிமேல்-ஓர் பால்-மதியம்-சூடி
நட்டம்-ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே                 (8)

உண்ணல்-ஆகா நஞ்சு-கண்டத்து உண்டு-உடனே-ஒடுக்கி
அண்ணல்-ஆகா அண்ணல்(வண்ணல்)‍ நீழல்-ஆர்-அழல் போல்-உருவம்
எண்ணல்-ஆகா உள்-வினை-என்று எள்க வலித்து-இருவர்
நண்ணல்-ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே               (9)

மாசு-மெய்யர் மண்டை-தேரர் குண்டர் குணம்-இலிகள்
பேசும்-பேச்சை மெய்-என்று-எண்ணி அந்நெறி செல்வ‌ன்மின்
மூசு-வண்டு-ஆர் கொன்றை-சூடி மும்மதிலும்-உடனே
நாசம்-செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே                  (10)

தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு-நல்லார் மல்கு-காழி ஞான-சம்பந்தன்-நல்ல
பண்பு-நள்ளாறு-ஏத்து -பாடல் பத்து இவை-வல்லார்
உண்பு-நீங்கி வானவரோடு-உலகில்‍உறைவாரே.            (11)

1 comment:

காஞ்சி பிலிம்ஸ் said...

குண்டர் குணம் - இந்த குண்டர் யார் தெறியுமோ ? இந்த ஒரு சொல்லை வைத்து வண்கொடுமை சட்டத்தை சனீஸ்வரன் மேலேயே பொடாலாம் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா ?

Post a Comment